பிரான்சில் தொடரும் பணிநிறுத்தப் போராட்டம்

Monday, 22 January 2018 - 19:32

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பிரான்சின் சிறைக்கூடங்களில் பணியாற்றும் சிறைகாவலர்களின் பணிநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் இரண்டாவது வாரமாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல சிறைக்கூடங்களில், சிறைக்காவலர்கள் கைதிகளினால் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழில் சங்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

சிறைக்காவலர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கொடுப்பனவுகள் என்பன குறித்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இன்று நாடளாவிய ரீதியாக சிறைக்கூடமுற்று முழுதாக சிறைக்கூட பணிகளை முடக்க தீர்மானித்துள்ளதாக தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பணிநிறுத்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில், கடந்த வாரம் தொழிற்சங்க தலைவர்களுடன் பிரான்சின் நீதித்துறை அமைச்சர் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

அதேவேளை, பிரான்சில் உள்ள சிறைக்கூடங்கள் வழமைபோல் இயங்க சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என நீதித்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது, பிரான்சில் 188 சிறைக்கூடங்களில் 78 ஆயிரம் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைக்கூடங்களில் 28 ஆயிரம் சிறைக்காவலர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips