இரண்டு அறிக்கைகளும் சபையில் சமர்ப்பிப்பு

Tuesday, 23 January 2018 - 13:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
முறி மோசடி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் விசாரணை அறிக்கைகள் சற்றுமுன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று குறித்த அறிக்கைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், அதன் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்திற்கான நாள் குறித்து, பிற்பகல் 2.30 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ள விசேட சந்திப்பின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips