வடக்கில் நெல் அறுவடை அதிகரிப்பு

Saturday, 03 February 2018 - 19:14

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முன்னைய போகங்களையும் விட தற்போது நெல் அறுவடை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது.

வறட்சியான நிலையிலும் முன்னைய போகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை குறித்த மாவட்டங்களில் 60 சதவீதமான அறுவடை மேலதிமாக கிடைத்துள்ளது.

அத்துடன், பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips