தமக்கு தேவையானவர்களை பழிவாங்காமல், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் சிறந்த அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி – சமனல விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும், மோசடி இல்லாத அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
இந்தநிலையில், பழிவாங்காமல், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories