பாம்பை கடித்து கொன்ற நபர்

Thursday, 22 February 2018 - 10:46

+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

உத்தரப் பிரதேசத்தில் தன்னை கடித்த விஷப் பாம்பை, விவசாயி கடித்து சாகடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ஹர்டோய் கிராமம்.

இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வழக்கம்போல் வயல்வெளிக்கு சென்றார்.

விவசாயப்பணிகளை மேற்கொண்டிருந்தவரை அங்கிருந்த விஷப் பாம்பு ஒன்று கடித்தது.

பாம்பு கடித்ததும் வழக்கம் போல் கூச்சலிடுவது, அருகில் உள்ளவர்களை அழைப்பது என இருக்காமல்.

என்னையா கடித்தாய் என்று ஆத்திரமடைந்த விவசாயி பாம்பை பிடித்து கடித்தே கொன்றுள்ளார்.

பாவம் அந்தப் பாம்பு, விவசாயி கடித்ததில் பரிதாபமாக உயிரை விட்டது.

இதன் பின்னர் சாவகாசமாக மருத்துவமனைக்கு சென்ற விவசாயி இது குறித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்

விவசாயியை  சோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்தப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பாம்பைக் கடித்த விவசாயிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதது தான் ஆச்சரியமாக உள்ளது என்கின்றார்கள் மருத்துவர்கள்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips