நாடு திரும்பினார் பிரிகேடியர் பிரியங்க பெர்னண்டோ

Thursday, 22 February 2018 - 13:52

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகரத்தின் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னண்டோ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கர பெர்னான்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரகத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips