ஆதிவாசி இளைஞரை கொடூரமாக தாக்கி செல்பி எடுத்துக் கொலை

Friday, 23 February 2018 - 16:22

%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
அரிசி திருடிய ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் இரவு நேரங்களில் கடைகளில் புகுந்து ஆதிவாசி இளைஞர் மது, அரிசி திருடி காட்டிற்குள் சென்று விடுகிறார். அவரைப் பிடிக்க 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று காட்டிற்குள் சென்றது.

மதுவை பிடித்து கயிற்றில் கட்டி, அவனுடன் செல்பி எடுத்துள்ளனர். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

பின்னர் கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினரிடம் மதுவை ஒப்படைத்தனர்.

அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கையில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த கும்பலுக்கு, கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆதிவாசி இளைஞரை அடித்து, செல்பி எடுத்துக் கொலை; கேரளாவின் அரங்கேறிய கொடூரம்!



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips