ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலினின் மரணம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸிடம் ஜனாதிபதி தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கின் அடிப்படையில் இலங்கையில் அவர் இலங்கையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவராக ஜனாதிபதி அவரை அறிமுகம் செய்துள்ளார்.
இதேவேளை, ஊனா மெக்கோலினின் சேவைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தமது நன்றியை தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories