அப்ரின் நகர் பூரண கட்டுப்பாட்டில்

Sunday, 18 March 2018 - 22:00

%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சிரியாவின் குர்திஷ் நகரான அப்ரின் நகரை பூரண கட்டுப்பாட்டின் கீழ் சிரியா கொண்டுவந்துள்ளது.

துருக்கியின் ஒத்துழைப்புடன் சிரிய துருப்பினர் இதனை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சிரியாவின் படையணிகளை சேர்ந்த பிரிவுகள் இந்த நகரத்தில் நிலைகொண்டுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை இன்று பூர்த்தியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குர்திஷ் போராளிகளை சிரியா பயங்கரவாத குழுவாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்த காலகட்டத்தில் 280 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது கன்னிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நகரத்தில் இருந்த பெரும்பாலான குர்திஷ் போராளிகள் ஏற்கனவே பொதுமக்களுடன் கலந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips