ஆமர்வீதி துப்பாக்கி பிரயோகத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணித்தார்

Monday, 19 March 2018 - 11:52

%E0%AE%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் உந்துருளியில் வந்த இருவர், மோட்டார் வாகனம் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகிழூர்தியில் வந்த நபர் மீது இன்று முற்பகல் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் தலைமறைவாகியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips