பாலஸ்தீனியர்களுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டுவந்த பிரெஞ் பிரஜை ஒருவர் கைது

Monday, 19 March 2018 - 19:45

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பாலஸ்தீனியர்களுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டுவந்த பிரெஞ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

டெல் அவிவியில் உள்ள பிரெஞ் தூதுவராலயத்தில் பணியாற்றும் 23 வயதான இவர் ராஜதந்திர சலுகைகளை பயன்படுத்தி பாலஸ்தீனியர்களுக்காக காசா பள்ளத்தாக்கில் இருந்து மேற்கு கரை பிராந்தியத்திற்கு ஆயுத கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தூதுவராலய வாகனம் என்பதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத வகையில் இந்த கடத்தலை மேற்கொண்டு வந்திருந்தார்.

இஸ்ரேலிய நீதிமன்றில் இன்று இவர் முன்னிலைப்படுத்த படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 70 கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தானியக்க துப்பாக்கிகளை கைது செய்யப்பட்ட போதே இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் உள்ள பிரெஞ் தூதுவராலயத்தின் பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில் இந்த சம்பவம் பாரதூரமானது என தெரிவித்துள்ளார்.

தூதுவராலயம், இஸ்ரேலிய புலனாய்வு தரப்பினருடன் இணைந்து இந்த விடயம் குறித்து செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips