Update: கடன்பொறுப்பு முகாமைத்துவ சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Friday, 23 March 2018 - 18:39

Update%3A+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
கடன் பொறுப்பு முகாமைத்துவ சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இடம்பெற்றபோது ஏற்பட்ட இயல்பற்ற நிலைமை காரணமாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்காக சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடன் பொறுப்பு முகாமைத்துவ சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று சபையில் இடம்பெற்றது.

இலத்திரனியல் முறைமை ஊடான வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகாமல் இருந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பின்னர் தமது வாக்கை பயன்படுத்தியதை அடுத்தே இயல்பற்ற நிலைமை ஏற்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 33 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் இயல்பற்ற நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்காக சபை நடவடிக்கைகளை சில நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

பின்னர், சபை மீண்டும் கூடியது.

இதன்போது மீண்டும் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த வாக்கெடுப்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வாக்கெடுப்பு கோரப்படாததை அடுத்து, சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார்.

Update: 23.03.2018 7.00------------------

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைவர்களின் கூட்டத்திற்காகவே இவ்வாறு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips