ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு

Friday, 23 March 2018 - 19:38

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+
பாகிஸ்தான் பிரதமர் ஷஹீட் கக்கான் அப்பாசிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இஸ்லாமாபாதில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று இடம்பெற்ற குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

1940 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட லாஹுர் உடன்பாட்டுக்கு அமைய பாகிஸ்தான் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வில், பிரதமர், ஷாஹிட் ககான் அபாஸி மற்றும் அந்நாட்டு படைப் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

இன்றைய குடியரசு நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹுஸைன் நன்றி தெரிவித்தார்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips