வறட்சி காரணமாக நாடுமுழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

Friday, 20 April 2018 - 15:06

%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+5+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வறட்சி காரணமாக நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 185 குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
புத்தளம் மாவட்டத்தில் 2 லட்த்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மன்னாரில் 29 ஆயிரத்து 276 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
குருநாகல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 803 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 195 பேரும், முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 5 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அம்பாறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 116 பேரும், வவுனியாவில் 5 ஆயிரத்து 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips