நான் அன்று கூறியது இன்று உண்மையாகிறது - மகிந்த

Friday, 20 April 2018 - 17:01

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+
தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை துறந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேரும் தமக்கு நம்பிக்கையானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட அவரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 மாதங்களிலேயே பசு மாடும், எருமை மாடும் இணைந்து வண்டியினை இழுக்க முடியாது என கூறியிருந்தேன்.

அதேபோலவே, தற்போது தேசிய அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்.

இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வெளியேறிய 16 பேரும் தமக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள் எனவும், ஜனாதிபதி தேர்தலின் போது தம்முடன் இணைந்து பணியாற்றியவர்கள் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips