பிரித்தானியாவின் முடிக்குரிய 2 ஆவது எலிசபத் மகாராணி தமது 92 ஆவது பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான பிரதான நிகழ்வு லண்டன் 'ரோயல் அல்பேர்ட்' மண்டபத்தில் பல உலக புகழ்பெற்றவர்களின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
ஆரம்ப நிகழ்வை டொம் ஜோன் பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இளவரசர் சார்ள்ஸ், அரச குடும்பத்தவர்கள், மற்றும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வின் இறுதியில் மேடையில் தோன்றிய இளவரசர் சார்ள்ஸ் தனது தாயாருக்கு வாழ்த்து கூறிய நிலையில் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
Follow US
Most Viewed Stories