தற்கொலை குண்டுத்தாக்குதல் -31 பேர் பலி

Sunday, 22 April 2018 - 16:37

%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-31+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் - காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

வாக்காளர்களை பதிவு செய்யும் நிலையமொன்றின் மீது இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக இவ்வாறு வாக்காளர்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் , தற்போது வரை 4 தடவைகள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips