இரு படகுகள் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி

Sunday, 22 April 2018 - 20:03

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+17+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தென்சீனாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 17 பேர் பலியாகினர்.

பாரிய நீரோட்டம் காரணமாக படகு மூழ்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறுகிய நீண்ட கட்டுமானத்தை கொண்ட இரு படகுகள் மூழ்கியதனை அடுத்து 60 பேர் வரையில் நீரில் மூழ்கியுள்ளனர்.

இரவில் இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து மீட்பு பணியாளர்கள் துரிதகதியில் செயல்பட்டு 40 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்புப்பணிகளுக்காக 200 மீட்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டதாக சீன சிங் குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்காப்பு உடைகள் அணியாத நிலையில் பல பயணிகள் படகுகளில் பயணித்துள்ளமையினாலேயே இந்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips