ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இரவு ஏழு மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தின் எதிர்கால பயணம் தொடர்பிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சயின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியில் அமர்வது குறித்து மத்திய செயற்குழுவிற்கு அவர்கள் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில விடயங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தின் எதிர்கால பயணம் தொடர்பிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சயின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதன்போது, நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியில் அமர்வது குறித்து மத்திய செயற்குழுவிற்கு அவர்கள் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில விடயங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories