பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு

Wednesday, 25 April 2018 - 21:14

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று மீண்டும் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இந்த மனு கரைச்சி பிரதேச செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதுபானசாலைகள் அமைக்கப்படவுள்ள இடங்களுக்கு அருகில் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் இயங்குவதாக பல முறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த மதுபானசாலைகள் அமையப் பெரும் நிலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையிலேயே, மனு கரைச்சி பிரதேச செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips