வெனிசுலா - கர்காஸ் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் கண்ணீர் புகை குண்டொன்று வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் , அவர்களில் அநேகமானோர் உயர்கல்வி பிரியாவிடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவில் கடந்த தினத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பல கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் , குறித்த கண்ணீர் புகை குண்டு அங்கு யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 8 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் , அவர்களில் அநேகமானோர் உயர்கல்வி பிரியாவிடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுலாவில் கடந்த தினத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பல கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் , குறித்த கண்ணீர் புகை குண்டு அங்கு யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow US
Most Viewed Stories