கண்ணீர் புகை குண்டு வெடித்ததால் 17 பேர் பலி

Sunday, 17 June 2018 - 8:19

%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+17+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வெனிசுலா - கர்காஸ் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் கண்ணீர் புகை குண்டொன்று வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் , அவர்களில் அநேகமானோர் உயர்கல்வி பிரியாவிடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுலாவில் கடந்த தினத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பல கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் , குறித்த கண்ணீர் புகை குண்டு அங்கு யாரால் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips