மகாவலி கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து

Wednesday, 20 June 2018 - 18:26

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
மகாவலி கங்கையின் கட்டுகஸ்தொட்ட - குஹாகொட பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த வெளிநாட்டு பயணிகள் சிலர் நீரில் மூழ்கினர்.

சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளே படகில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு பெண்கள் உள்ளிட்ட 6 வெளிநாட்டவர்களும், படகை செலுத்திய நபருமே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

பிரதேசவாசிகள், கடற்படையினர் மற்றும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips