காட்டு யானை தாக்கி இரண்டு மீனவர்கள் பலி (படங்கள்)

Friday, 22 June 2018 - 18:40

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
அம்பாறை - பானம வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணியளவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற இருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் காயமடைந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

58 மற்றும் 59 வயதுகளையுடைய மீனவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips