தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை.
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் தாம் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். தமது பாதை எது? என்பதை தாம் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை.
காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததால் தாம் ஒருவழி பாதையில் செல்வதாக நினைத்து விட வேண்டாம். தமது பாதை எது? என்பதை தாம் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories