கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை புலியொன்று கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுத்தை கொல்லப்பட்டபோது பதிவுசெய்யப்பட்ட காணொளிகளை அடிப்படையாக கொண்டு இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுத்தையை கொன்ற காணொளிகளை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories