கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தை புலி ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் இன்று காலை கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அம்பாள்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றையவர் காவல்துறையில் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் இன்று காலை கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அம்பாள்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றையவர் காவல்துறையில் சரணடைந்தமையை அடுத்து கைது செய்யப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories