மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாளையதினம் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக, சபாநாயகர் கருஜெயசூரிய கூறி இருந்தார்.
இதன்படி நாளை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஏலவே 3 மாகாண சபைகளின் அதிகாரக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 3 மாகாண சபைகளின் அதிகாரக் காலம் இந்த வருடத்துடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொணர்ந்த ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் கடந்த வார அமர்வில் இடம்பெற்றிருந்தது.
Follow US
Most Viewed Stories