முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் கரடி ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதி இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் நேற்று முன்தினம் பிற்பகல் அருகில் இருந்த காவலரண் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் எதிர்பாராத விதமாக அங்கு வந்த கரடி அவரை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இராணுவ வீரர் உடனடியாக முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கே முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக பதவிய பிரதான வைத்தியசாலைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories