கடந்த அரசாங்கத்தின் போதே பாதாள உலக குழுவினர் ஊக்குவிக்கப்பட்டனர்

Saturday, 21 July 2018 - 19:04

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
கடந்த காலத்தில் பாதாள உலக குழுவினருக்கு ஊக்கம் வழங்கப்பட்டமையினாலேயே தற்போது, அதன் பாதிப்பை மக்கள் எதிர் நோக்கியுள்ளதாக, அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களிலேயே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், பாதாள உலக குழுவினருக்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

எனினும் தற்போதைய அரசாங்கம் அவர்களை கட்டுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips