பலாங்கொடை சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்தும்...! சிறுத்தைகளால் பாதிப்பா?

Sunday, 22 July 2018 - 19:45

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%3F
கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயுள்ள பலாங்கொடை - சமனலவத்த பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் , இராணுவ குழுவொன்று சமனலவத்த பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

5ம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

கடந்த 20ம் திகதி சிறுவனின் தந்தை விறகு வெட்டுவதற்காக காட்டிற்கு சென்றுள்ள நிலையில் , பின்னர் சிறுவன், தந்தை இருக்கும் இடத்திற்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.

எனினும் , தந்தை விறகு வெட்டி வீடு திரும்பிய போதும் , மகன் வீடு திரும்பவில்லை.

அன்றைய நாள் தொடக்கம் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் , பலாங்கொடை சமனலவத்த பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் கடந்த தினங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips