பாகிஸ்தானில் நகைக் கடையில் வைரக்கற்களை திருடிய உலகின் மிகச்சிறிய திருடனைக் கண்டு காவல்துறையினர் அதிசயித்தனர்.
அங்கிருந்த நகைக் கடை ஒன்றில் அவ்வப்போது சிறிய அளவிலான சில வைரக்கற்கள் காணாமல் போவது கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவை ஆய்வு செய்த போது முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த காவல்துறையினர், அதனை உற்று நோக்கிய போது எறும்பு ஒன்று வைரக்கற்களை இரை என நினைத்து தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியில் எறும்பின் இருப்பிடத்தில் இருந்து சில வைரக்கற்களை கைப்பற்றிய காவல்துறையினர், வழக்கு எதுவும் பதிவு செய்யமுடியாமல் ஏமாற்றத்துடனும், ஆச்சரியத்துடனும் திரும்பினர்.
Follow US
Most Viewed Stories