இன்று 18 மணி நேர நீர்வெட்டு

Friday, 17 August 2018 - 8:55

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+18+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
களனி மற்றும் வத்தளை உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று காலை 9 மணி தொடக்கம் 18 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு நீரினை விநியோகிக்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பித்தல் செயற்பாடுகள் காரணமாக இந்த  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி , களனி , பெஹலியகொடை , வத்தளை , மாபோல மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips