சீரற்ற காலநிலையினால் பெரும் சோகம்...!!

Sunday, 19 August 2018 - 10:32

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21%21
கேரளாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 லட்சத்து 61 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் 3 ஆயிரத்து 466 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
கேரளாவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 350இற்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதேநேரம் வெள்ளம் காரணமாக கேரள மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

இதன் காரணமாக, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லீற்றர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் எடுத்து செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips