விக்னேஸ்வரனுக்கு டெனிஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை

Sunday, 19 August 2018 - 19:49

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென எண்ணி தமிழ் மக்களின் எதிர்கால இலக்கை சிதைக்க வேண்டாம் என வடமாகாண முதலமைச்சரிடம், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர்.

முன்னாள் போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் உள்வாங்கி புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான சில யோசனைகள் கடந்த காலத்தில் தம் மனதில் எழுந்ததுண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு துரோகம் இழைக்குமாயின் அந்த விடயம் தூசி தட்டப்படும் என குறிப்பிட்டார்.

தம்மை பொறுத்தமட்டில் கூட்டமைப்பு சரியாகவே பயணிக்கின்றது என தெரிவித்துள்ள அவர், கடந்த காலத்தில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டறியும் படியும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்போது, அர்த்தமற்ற பல காரணங்களே தெரிவிக்கப்படும் எனவும் பா.டெனிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips