வடக்கில் அமைக்கப்படவுள்ள வீடுத்திட்டத்தை, எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்லவென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்ய கூடியதாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டம் தொடர்பில் எமது செய்தியாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளை சமர்பித்துள்ளன.
அந்த வகையில் தற்போது மக்கள் விரும்புகின்ற கல் வீட்டு திட்டத்தினை இந்தியாவே முன்வைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் கல் வீட்டுத்திட்டத்தையே விரும்புகின்றது.
எனவே கல் வீட்டுத்திட்டத்தை இந்தியாவோ சீனாவோ அல்ல, ரஸ்யா முன்வைத்தாலும் அதனை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்ய கூடியதாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டம் தொடர்பில் எமது செய்தியாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தமது திட்ட முன்மொழிவுகளை சமர்பித்துள்ளன.
அந்த வகையில் தற்போது மக்கள் விரும்புகின்ற கல் வீட்டு திட்டத்தினை இந்தியாவே முன்வைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் கல் வீட்டுத்திட்டத்தையே விரும்புகின்றது.
எனவே கல் வீட்டுத்திட்டத்தை இந்தியாவோ சீனாவோ அல்ல, ரஸ்யா முன்வைத்தாலும் அதனை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories