சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு தற்போது சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அவரின் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றும் நோக்கிலேயே இந்த சத்திர சிகிச்சை இடம்பெறுவதாக, ஸ்ரீ ஜனவர்தனபுர மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் பிபாத் வேரத்த தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளியான இனங்காணப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் 6 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
அவரின் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றும் நோக்கிலேயே இந்த சத்திர சிகிச்சை இடம்பெறுவதாக, ஸ்ரீ ஜனவர்தனபுர மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் பிபாத் வேரத்த தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளியான இனங்காணப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் 6 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories