கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் / மகிந்தவின் வாக்குமூலம் சமர்ப்பிப்பு

Monday, 20 August 2018 - 19:12

%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%2F+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் பெற்றப்பட்ட வாக்குமூலம் தொடர்பான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கீத் நொயார் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று கல்கிசை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சென்று ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இது குறித்து வாக்குமூலம் வழங்கியுள்ள கீத் நொயார், தம்மை கடத்திச்சென்று விலங்கிட்டு, கண்களை கட்டி தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், கடந்த தினம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips