அமெரிக்காவை தாக்கிய 'புளோரன்ஸ்'

Friday, 14 September 2018 - 18:56

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%27%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%27
'புளோரன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தற்போது அமெரிக்க கிழக்கு கரையோரத்தை தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அது கரையோர பகுதியில் இருந்து நில பிரதேசத்தை நோக்கி மணிக்கு 90 மைல் வேகத்தில் நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முதல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா உட்பட பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்விநியோகம் இன்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளியை அடுத்து பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நம்பப்படும் பிரதேசங்களில் இருந்து பத்து லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இட்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிய இயற்கை அனர்த்த அச்சுறுத்தல் எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சூறாவளியை அடுத்து 40 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்று வீசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக 14 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.

50 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளி போன்று தற்சமயம் ஏற்பட்டுள்ள சூறாவளி மாறக்கூடுமென மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips