பாதுகாப்பு இன்னும் கிடைக்கவில்லை - நாமல் குமார

Wednesday, 19 September 2018 - 7:38

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் குறைப்பாடுகள் இருப்பதாக மோசடிகள் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

அதனால் தமது பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக அவர் எமது செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பான தகவல்களை வெளியிட்டமைக்காக அவர் இரண்டு தடவைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

கடந்த தினம் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், தமக்கு விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்ட போதும், இன்னும் அது கிடைக்கப்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips