தமிழகம் - திருநெல்வேலியில் பெற்றோல் நிரப்பிய போது உந்துருளி தீப்பிடித்ததில் காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
குறித்த இளைஞர் கடந்த வியாழக்கிமை முருகன்குறிச்சியில் உள்ள பெற்றோல் நிலையத்தில் உந்துருளிக்கு பெற்றோல் நிரப்ப சென்றுள்ளார்.
பெற்றோல் நிரப்பிய ஊழியர், பெற்றோல் நிறைத்த பின்னர் குழாயை வெளியே எடுத்த வேளை இளைஞரின் ஆடை மீதும் உந்துருளி மீதும் சிறிதளவு பெற்றோல் சிந்தியது.
பின்னர் அவர் உந்துருளியை செலுத்த முற்பட்ட போது உந்துளியிலும், ஆடையிலும் தீப்பிடித்துள்ளது.
இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் முழு டேங்க் நிரப்பச் சொல்லி வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தாலும் குறித்த அளவுக்கு முன்னரே டேங்க் நிரம்புகிறதா என்பதை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கவனிக்க வேண்டும்.
அதே போல் வாகனம் மீதோ உடைகள் மீதோ எரிபொருள் சிந்தினால் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து வாகனத்தை இயக்க வேண்டும்.
இதனை கவனத்தில் கொள்ளாமை காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் கடந்த வியாழக்கிமை முருகன்குறிச்சியில் உள்ள பெற்றோல் நிலையத்தில் உந்துருளிக்கு பெற்றோல் நிரப்ப சென்றுள்ளார்.
பெற்றோல் நிரப்பிய ஊழியர், பெற்றோல் நிறைத்த பின்னர் குழாயை வெளியே எடுத்த வேளை இளைஞரின் ஆடை மீதும் உந்துருளி மீதும் சிறிதளவு பெற்றோல் சிந்தியது.
பின்னர் அவர் உந்துருளியை செலுத்த முற்பட்ட போது உந்துளியிலும், ஆடையிலும் தீப்பிடித்துள்ளது.
இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்த தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் முழு டேங்க் நிரப்பச் சொல்லி வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தாலும் குறித்த அளவுக்கு முன்னரே டேங்க் நிரம்புகிறதா என்பதை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கவனிக்க வேண்டும்.
அதே போல் வாகனம் மீதோ உடைகள் மீதோ எரிபொருள் சிந்தினால் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து வாகனத்தை இயக்க வேண்டும்.
இதனை கவனத்தில் கொள்ளாமை காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
Follow US
Most Viewed Stories