பாணின் விலையை குறைக்க தீர்மானம்

Wednesday, 19 September 2018 - 16:57

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
எதிர்வரும் தினத்தில் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்ன தெரிவித்தார்.

பேக்கரி உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , அது மிகவும் சாதகமாக அமைந்ததாக பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் குறிப்பிட்டார்.

கோதுமை மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பழைய விலைக்கே கோதுமை மாவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி , கோதுமை மா பழைய விலைக்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு கிடைத்தவுடன் பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips