இரத்தினபுரி தமிழ் இளைஞர் படுகொலை செய்த நான்கு சகோதரர்கள்

Friday, 21 September 2018 - 21:02

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இரத்தினபுரி – பாம்கார்ட்ன் தோட்டத்தில் சட்டவிரோத மதுபானத்திற்கு எதிராக செயற்பட்ட இளைஞன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளில் மேலும் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி காவலநிலைய பொறுப்பதிகாரி எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் சகோதரர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி – பாமன்கார்ட்ன் தோட்டத்தில் சட்டவிரோத மதுபானத்திற்கு எதிராக குறித்த இளைஞன் செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களினால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips