ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவர் பதவி தயாசிறிக்கு

Friday, 21 September 2018 - 21:11

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மத்திய கொழும்புக்கான கட்சி தொகுதி அமைப்பாளராக அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், கடுவலை தொகுதியின் இணை அமைப்பாளர்களாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மகே, முன்னாள் நகர பிதா ஜீ.எச்.புத்ததாச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்ட அமைப்பாளராகவும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகவும், பன்னல பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன , கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகவும், அதுல குமார ராஹுபத்த, இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர் மற்றும் இரத்தினபுரி தொகுதிக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, டப்ளிவ் டி. ஜே செனவிரத்ன, லக்ஷ்மண் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips