காவல்துறைமா அதிபர் இராஜினாமா செய்யவில்லை

Tuesday, 16 October 2018 - 20:46

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
பல்வேறு செய்திகள் வெளியானாலும் காவல்துறைமா அதிபர் தமது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வாகன விபத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரை வாகன விபத்துக்களால் 2 ஆயிரத்து 368 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனுடன் கடந்த 7 வருடங்களில் 18 ஆயிரத்து 491 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips