சாலை மறியல் போராட்டத்தில் இறங்கிய பெருந்தோட்ட தொழிலாளர்கள்!! (படங்கள்)

Thursday, 18 October 2018 - 13:17

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி பெருந்தோட்டப் பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இதன்படி இன்றையதினம் ஹப்புத்தளை - பிட்டரத்மலை, தொட்டலாகலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 600க்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினார்கள்.
 
அதேநேரம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, லிந்துலை காவற்துறை நிலையத்துக்கு முன்பாக, மட்டுக்கலை, டீ.ஆர்.ஐ. லென்தேர்மஸ், லிந்துலை, வோலட்ரீம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

அத்துடன் டயகம - தலவாக்கலை பிரதான வீதியில் திஸ்ப்பனை சந்தியில், செலிடோனியா, ஹென்ஃபோல்ட், கௌலினா போன்ற தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம் நானுஓயா குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியிலும், தோட்டமக்கள் தங்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
 
இதில் அந்த பகுதியில் உள்ள நான்கு தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips