இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமையைத் தோற்றுவிப்பதற்காக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை திரிபுபடுத்தி வெளியிட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கொலை சூழ்ச்சி தொடர்பான செய்தி ஒன்று த ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.
அமைச்சரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை திரிபுபடுத்தி எவ்வித பொறுப்புணர்வும் இன்றி, இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் யார் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கொலை சூழ்ச்சி தொடர்பான செய்தி ஒன்று த ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.
அமைச்சரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயத்தை திரிபுபடுத்தி எவ்வித பொறுப்புணர்வும் இன்றி, இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் யார் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories