இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குடன் இருவர் கைது (படங்கள்)

Thursday, 18 October 2018 - 20:47

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான டைட்டன் வகை வலம்புரி சங்கொன்றை விற்பனை செய்ய சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிஹிணியாடி பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் வலம்புரி சங்கினை விற்பனை செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வலம்புரி சங்கு சுமார் 2 கிலோ கிராம் எடையை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


   
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips