கந்தகார் காவற்துறை தலைமை அதிகாரி சுட்டுக்கொலை

Friday, 19 October 2018 - 16:07

%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF++%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
ஆப்கானிஸ்தானின் உயர் பாதுகாப்புத் தளபதியான, கந்தகார் காவற்துறை தலைமை அதிகாரி ஜெனரால் அப்துல் ராசிக் கந்தஹாரில் அவரது மெய் பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தலிபானியர்த் தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

மாநில ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் ஒன்றின் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் அமெரிக்காவின் உயர் தளபதி ஜெனரால் ஸ்கொட் மில்லரும் இலக்கு வைக்கப்பட்டிருந்த போதும், அவர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் உள்ளுர் புலனாய்வுத் தலைமை அதிகாரி கொல்லப்பட்டதுடன், ஆளுனர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளர்.

மேலும் 3 அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips