கள்ளக்காதலனை தீயிட்டு கொழுத்திய பெண்!!

Monday, 22 October 2018 - 11:00

%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%21%21
பெண்ணொருவரினால் தனது கள்ளக்காதலினின் உடலில் பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொழுத்திய சம்பவம் அராச்சிகட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 20 அம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் தற்போது மருத்துவனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் திருமணமான இரண்டு குழந்தைகளின் தாய் என்பதுடன், கணவர் கைவிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த நபருடன் சுமார் 11 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த நபர் கொழும்பில் சாரதியாக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 20 ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நபரின் வீட்டில் அவருக்கான திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக அன்றைய தினம் பெண்ணிடம் கூறிய நிலையில், இருவருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது அந்த பெண், குறித்த நபரின் உடல் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு கொழுத்தியுள்ளார்.

காயமடைந்த 34 வயதான நபர், 39 வயதான அவரது கள்ளக்காதலியாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அராச்சிகட்டுவ காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips