ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்: சாதனை படைத்த மருத்துவர்கள் !

Friday, 09 November 2018 - 19:07

%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%21+
ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை குழந்தைகளை அவுஸ்திரேலிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் இன்று பிரித்தெடுத்துள்ளனர்.

பூட்டானை சேர்ந்த இந்த குழந்தைகளை பிரித்தெடுக்கும் சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட 20 இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதிகள் ஆறு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

மெல்போனில் உள்ள ரோயல் சிறார் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஜோ கிறீமெரியின் தலைமையில் இடம்பெற்ற சத்திர சிகிச்சையின் பின்னர் இரு குழந்தைகளும் ஆரோக்கிய நிலையில் உள்ளதாக மருத்துவ தரப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான இமயமலை சாரலில் உள்ள பூட்டானில் இப்படியான சத்திர சிகிச்கையினை மேற்கொள்ளக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூட்டானை சேர்ந்த குறித்த குழந்தைகளும், அவர்களது தாயாரும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு கடந்த மாதம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த ஒரு மாத காலமாக அந்தக் குழந்தைகளுக்கு போசாக்கான வலுத்தன்மை ஊட்டப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips